Unknown things about honey in Tamil | தெரிந்த தேனைப்பற்றி தெரியாத பல விடயங்கள்

தேன் தெரிந்த தேனைப்பற்றி தெரியாத பல விடயங்கள் !

தேன் தானும் கெடாது தன்னுடன் சேரும் பொருளையும் கெட விடாது. தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. முத்து போல உருண்டு நகரும் தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும்.
இதை நாய் முகராது.

அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது !!!
வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை கொஞ்சம் உள்ளங்கையில் வைத்து கால் ஸ்பூன் தேனை வைத்து நன்றாக மத்தித்தால் உள்ளங்கை நன்றாக கொதிக்கும் அப்படி கொதித்தால் அது நல்ல சுத்தமான தேன் !!!
காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. 
தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். 
இது காய்ச்சிய தேன். 

இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது !!!

சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது !!!

அதனால் தேனை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து நன்றாக நக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டு பிறகு சுடுநீர் அருந்தவும் வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை ஏறாது வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.

பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.  ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு (சித்த மருந்துகள்) தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம். 

எச்சரிக்கை: ஆங்கில மாத்திரைகளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது !!!

எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ் பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. 

அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும். கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது.  விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும். 

நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். 
மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது. தேன் மிக உயர்ந்த அமிர்தம். இது அனைவருக்கும் தெரியும் !!!

ஆனால் அந்த தேனே சிலசமயம் நஞ்சாக மாரி ஆளைக்கொள்ளும் !!!
நாம் எதற்காகவோ ஆங்கில மருந்து சாப்பிட்டுயிருக்கும் போது பாலில் தேன்கலந்தோ சாப்பிடுவோம் இனி இதுபோல் செய்யாதீர்கள் !!!

இந்த பரிசோதனையை நீங்கள் செய்துபாருங்கள் !!!
பெரும்பாலான மாத்திரையில் சுண்ணாம்புசத்து அதிகம் உண்டு !!!

சிறிது வெற்றிலைபோடும் சுண்ணாம்பில் தேன்கலந்து கை வைத்து பாறுங்கள் கை கொப்பளிக்கும் அளவு சூடுவரும் !!!

ஒருவர் சுகர்மாத்திரை சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் இருமலுக்காக ஒருஸ்பூன் தேன் குடித்தார் சிறிது நேரம் கழித்து வயிறு எரிந்து வேர்த்து இதயவலிவந்து டாய்லட்போயி அவஸ்தைபட்டு விட்டார் !!!

நல்ல வேளை அவர் வீட்டில் எலுமிச்சம்பழம் இருந்தது அதைகுடித்து விஷம்முறித்து ஆபத்தில்இருந்து தப்பித்தார் !!!




Comments

Popular posts from this blog

27 Nakshatra Trees | 27 நட்சத்திர விருட்சங்கள்

34 species of palm trees | பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.

Simple explanations for children to teach Tamil without spelling mistakes | எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்