Posts

Showing posts from December, 2021

The traditional rice varieties of the day in the case of the forefathers | முன்னோர்களின் வழக்கிலிருந்த அன்றைய பாரம்பரிய நெல் ரகங்கள்

Image
#முன்னோர்களின்_வழக்கிலிருந்த_அன்றைய_பாரம்பரிய_நெல்ரகங்கள்...!!! #நெல்லின் தொடக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக நெல் பயிர் சாகுபடி நமது முன்னோர்கள் செய்து வந்ததாக பல சான்றுகள் கூறுகின்றன. #தன்மை உள்ளூர் சூழல், நில அமைப்பு, காற்று, வறட்சி, பனிப்பொழிவு, வெள்ள பாதிப்பு மற்றும் பல இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் நம்மிடம் இருந்தன. #உழவர்களே விஞ்ஞானிகள் காலம் காலத்துக்கும் இந்திய உழவர்களே விஞ்ஞானிகளாக இருந்து நிலத்துக்கும் பருவத்துக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்ற ஒரு லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்களைக் கண்டு வைத்திருக்கிறார்கள். #விதையே ஆயுதம் ஆனால் இன்றோ நம்மிடம் மிஞ்சி இருப்பது சில ரகங்கள் ஏனைய ரகங்கள் நவீன வேளாண் புரட்சியின் மோகத்தால் அழிந்துவிட்டன. இருப்பதையாவது நாம் மீட்டெக்க வேண்டும். வளர்ந்து விளையும் வரப்புக் குடைஞ்சான், வறட்சி தாங்கி விளையும் வாடஞ்சம்பா, உடல் உழைப்புக் குறைந்தோர் விரும்பி உண்ணும் கிச்சடிச் சம்பா, சீரகச் சம்பா, அகிலம் போற்றும் ஆற்காடு கிச்சடி, நெல்லை மக்கள் தலைமுறை தலைமுறையாகப் பயிரிட்ட கொட்டாரஞ்சம்பா, நீரிழிவு நோய்க்கு மருந்தாகும். விளையு...

Every proverbial word spoken by the ancestors has meanings | முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது.

முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது. தவளை கத்தினால் மழை. அந்தி ஈசல் பூத்தால் - அடை மழைக்கு அச்சாராம். தும்பி பறந்தால் தூரத்தில் மழை. எறும்பு ஏறில் பெரும் புயல். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. தை மழை நெய் மழை. மாசிப் பனி மச்சையும் துளைக்கும். தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு. புற்று கண்டு கிணறு வெட்டு. வெள்ளமே ஆனாலும்-பள்ளத்தே பயிர் செய். காணி தேடினும் கரிசல் மண் தேடு. களர் கெட பிரண்டையைப் புதை. கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி-கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடை நிலம் எருக்கு. நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். ஆடிப்பட்டம் பயிர் செய். விண் பொய்த்தால் மண் பொய்க்கும். மழையடி புஞ்சை மதகடி நஞ்சை. களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ. அகல உழவதை விட ஆழ உழுவது மேல் . புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு. குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும். கூளம் பரப்பி கோமியம் சேர் . ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. நிலத்த...